சிவகங்கை மாவட்டத்தில்,கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி திட்டத்தில் 92,74,00,000 ரூபாய் மதிப்புள்ள நகை கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதனால், 23, 599 பேர் பயனடைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அட்ராசக்க.. இப்போதான் பாக்கியலட்சுமி களைகட்டுது – கோபியை பிக்னிக்கில் வசமாக பிடித்த செல்வி!
கூட்டுறவு நகை கடன் தள்ளுபடி :
தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆட்சி அமைத்த, திமுக தலைமையிலான அரசு 5 சவரனுக்குள் கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் பெற்றவர்களுக்கு, தள்ளுபடி வழங்கப்படும் என்று அறிவித்தனர். இதில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாக குற்றச்சாட்டு எழுந்ததால், அரசு விசாரணை குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு மேற்கொண்ட கள ஆய்வின் அடிப்படையில், தகுதி வாய்ந்த பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டனர். இதில் தேர்வானவர்களுக்கு மட்டுமே நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என அரசு அண்மையில் அறிவித்தது.
அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த 166 கூட்டுறவு வங்கிகளில், நகை கடன் தள்ளுபடி பெற்ற, 23, 599 பயனாளிகளுக்கு, தலா 92 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பிலான நகை கடன்கள் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த நகை கடன் தள்ளுபடி பெற்றவர்களுக்கான சான்றிதழ் வழங்கப்பட்டு, நகைகள் உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள மத்திய கூட்டுறவு வங்கியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தலைமை தாங்கினார். இந்த நகை கடன் தள்ளுபடியில் தகுதியானவர்கள் விடுபட்டிருந்தால் அவர்கள் கூட்டுறவு நிறுவனத்தில் மேல் முறையீடு செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்