தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 5 மாதங்களுக்கு மேலாக பள்ளிகள் மூடப்பட்டு உள்ள நிலையில், சில மாநிலங்களில் செப்.21 முதல் 9 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்கப்பட்டு உள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தற்போது பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறு இல்லை என அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் தெரிவித்து உள்ளார்.
பள்ளிகள் திறப்பு:
கடந்த மார்ச் மாதம் 24ம் தேதி முதலே நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டு உள்ளன. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காக ஆன்லைன், தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. மேலும் பள்ளி ஆண்டுத் தேர்வுகள், கல்லூரி செமஸ்டர் தேர்வுகள் (இறுதிப்பருவம் தவிர) ரத்து செய்யப்பட்டு தேர்ச்சி வழங்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் செப்.21 முதல் நாடு முழுவதும் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை பின்பற்றி, பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர்கள் எழுத்துப்பூர்வ அனுமதியை பெற்று 9 முதல் 12ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
ENEWZ – சமூக வலைதள பக்கங்களில் சேர கிளிக் பண்ணுங்க!!
இதனால் அசாம், ஆந்திரா உட்பட 6 மாநிலங்களில் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் தமிழகத்தில் இது குறித்து எந்த முடிவும் எடுக்கப்படவில்லை. கொரோனா பரவல் கட்டுக்குள் வந்த பிறகு தான் பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே திட்டவட்டமாக தெரிவித்து உள்ளது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செங்கோட்டையன், முழுமையான கட்டணம் வசூலித்த தனியார் பள்ளிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார்.
“என்லட்” சட்டக்கல்வி நுழைவுத் தேர்வு ரத்து – உச்சநீதிமன்றம் தீர்ப்பு!!
மேலும் தமிழகத்தில் பள்ளிகளை திறப்பதற்கான சாத்தியக்கூறுகள் தற்போது இல்லை, அரசுப்பள்ளிகளில் செப்.30 வரை மாணவர் சேர்க்கை நடைபெறும் என கூறினார். சுமார் 2.5 லட்சம் தனியார் பள்ளி மாணவர்கள், அரசுப்பள்ளிகளில் சேர்ந்துள்ளதாகவும், மாநிலம் முழுவதும் 10 இடங்களில் தொடக்கப் பள்ளிகளும், 15 இடங்களில் உயர்நிலை பள்ளிகளும் தொடங்கப்படும் எனவும் அவர் தெரிவித்து உள்ளார்.