தீபாவளி பண்டிகையையொட்டி ஒரு நாள் கூடுதலாக விடுமுறை அறிவித்ததை அடுத்து தமிழகத்தில் வரும் நவம்பர் 19ம் தேதி பள்ளி, கல்லூரிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அரசு உத்தரவு:
நாடு முழுவதும் தீபாவளி பண்டிகை கடந்த மாதம் 24ம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட்டது. மேலும் இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை திங்கள் கிழமையில் வந்ததால் சனி, ஞாயிறு, திங்கள் என 3 நாட்கள் விடுமுறை எடுத்துக்கு கொண்டு பொதுமக்கள் வெளியூரில் இருந்து சொந்த ஊருக்கு பண்டிகையை கொண்டாட சென்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இருப்பினும் அதற்கு அடுத்த நாள் அதாவது செவ்வாய் கிழமை (அக்.,25) வேலை நாள் என்பதால் திங்கள்கிழமை அன்றே சொந்த ஊரில் இருந்து திரும்புவது கஷ்டம். அதனால் அக்.,25 அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று பெற்றோர், மாணவர்கள் தரப்பில் கோரிக்கை எழுந்துள்ளது.
LPG சிலிண்டரில் வந்த லேட்டஸ்ட் வசதி.., இனி யாராலும் திருட முடியாது.., மத்திய அரசு எடுத்த அதிரடி முடிவு!!
இதை கருத்தில் கொண்டு தமிழக அரசு, கடந்த அக்டோபர் 25ம் தேதி தமிழகம் முழுவதும் உள்ள பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்துக் கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அளித்து உத்தரவிட்டது. இருப்பினும் அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் வரும் நவம்பர் 19ம் தேதி அன்று பணி நாளாக அறிவித்துள்ளனர். இதன் அடிப்படையில் நாளை மறு நாள் (நவம்பர் 19ம் தேதி) தமிழகம் முழுவதும் பள்ளிகள், கல்லூரிகள் வழக்கம்போல் செயல்படும் என்பது குறிப்பிடத்தக்கது.