கொரோனா பரவல் காரணமாக நாடு முழுவதும் முடங்கி உள்ளது. இந்நிலையில் தொற்றின் வீரியம் சற்று குறைந்து உள்ளதை அடுத்து மாநில அரசுகள் தளர்வுகளை அவ்வப்போது அறிவித்து வருகின்றன. இதையடுத்து தமிழகத்தில் இந்த கல்வியாண்டுக்கான 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு இருந்தது. மேலும் தமிழக அரசு சமீபத்தில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்தது. இரண்டாம் அலையின் தொற்று வேகம் படிப்படியாக குறைந்த நிலையில் இன்று முதல் பள்ளிகளுக்கு தலைமையாசிரியர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் மாணவர் சேர்க்கை, மதிப்பெண் சான்றிதழ் வழங்குதல் போன்ற பள்ளி பணிகளுக்காக பணிக்கு வர உத்தரவு பிறப்பித்து இருந்தது.மேலும் 11 -ம் வகுப்பிற்கான சேர்க்கை நெறிமுறைகளையும் அறிவித்து இருந்தது. தற்போது தமிழகத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து பள்ளிக் கல்வித்துறை கூறியதாவது, திருப்பூர், கோவை உள்ளிட்ட தொற்று குறையாத 11 மாவட்டங்களை தவிர 27 மாவட்டங்களில் அனைத்து வகுப்புகளுக்கும் மாணவர் சேர்க்கையை தொடங்கலாம் என அறிவித்துள்ளது. அதாவது ,சுழற்சி முறையில் ஆசிரியர்கள் பள்ளிக்கு வரவேண்டும் எனவும், 1 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்ச்சி விபரங்களைக் கல்வி மேலாண்மை தாக்கல் முறைமை இணையதளத்தில் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது.
இந்த அறிவிப்பால் கொரோனா இரண்டாம் அலை தொற்று தற்போது குறைந்துள்ள நிலையில், பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கைக்கு பிறகு அரசு நெறிமுறைகளின்படி மீண்டும் பள்ளிகள் துவங்கும் என்ற நம்பிக்கை மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களிடம் மத்தியில் எழுந்து உள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்