தமிழகத்தில் 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு, காலை சிற்றுண்டி வழங்க ஆலோசனை நடந்து வருவதால், பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்ற வாய்ப்புள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.
அதிரடி மாற்றம்:
தமிழகத்தில், கொரோனா பரவலின் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு பிப்ரவரி மாதம் முதல் பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இது போக, 10, 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் தொடங்கி, நடைபெற்று வருகிறது. கொரோனா பரவல் காரணமாக, பாடத்திட்டங்கள் 35% வரை குறைக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுத் தேர்வுக்கான கேள்விகள் எளிமையாக அமைந்து வருகிறது. இந்த நிலையில், ஊட்டச்சத்து குறைபாட்டை சரி செய்ய 1 முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு காலை சிற்றுண்டி கொடுப்பது தொடர்பாக அரசு ஆலோசித்து வருகிறது. இந்த காலை சிற்றுண்டிகாக, மாநிலத்தில் பள்ளிகள் செயல்படும் நேரம் மாற்றப்படுமா? என்பது குறித்து விரைவில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்