
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாகி வருவதால் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக நீர் நிலைகள் நிரம்புவதோடு, சாலைகளிலும் மழை நீர் தேக்கங்கள் வெள்ளம் போல் காட்சி அளிக்கிறது. எனவே அதிக மழைப்பொழிவு இருக்கக்கூடிய மாவட்டங்களில் மாணவர்கள் பாதுகாப்பு நலன் கருதி பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.
தமிழக அரசுப் பள்ளி ஆசிரியர் பணியிடத்திற்கான கல்வித்தகுதி மாற்றம்., வெளியான முக்கிய அறிவிப்பு!!!
ஏற்கனவே நடப்பாண்டில் கோடை விடுமுறை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், தற்போது தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது. இந்த விடுமுறை நாட்களை ஈடு செய்ய சனிக்கிழமை தோறும் பள்ளிகள் செயல்படும் என பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இருந்தாலும் இது தொடர்பான உத்தரவுகளை அந்தந்த மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே முடிவு செய்யலாம் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.