தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு முடிந்த பின், விடப்படவுள்ள விடுமுறை குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
விடுமுறை அறிவிப்பு :
தமிழகத்தில் செப்டம்பர் மாத இறுதியில், அதாவது அடுத்த வாரத்தில் பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு நடைபெற உள்ளது. தேர்வு நெருங்கி வருவதால், இந்த பருவத்திற்குரிய பாடத்திட்டத்தை விரைந்து முடிப்பதற்காக ஆசிரியர்கள் முனைப்புடன் மாணவர்களுக்கு பாடங்களை நடத்தி வருகின்றனர்.
தற்போது இந்த காலாண்டு தேர்வு முடிந்ததும் மாணவர்களுக்கு விடப்படும் தேர்வு விடுமுறை குறித்து பள்ளி கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது, 1 முதல் 5ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு அக்.1 முதல் 9ம் தேதி வரையிலும், 9 முதல் 12ம் வகுப்பு வரை அக்.1 முதல் 5ம் தேதி வரையிலும் விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த விடுமுறை முடிந்து, 1 முதல் 5ம் வகுப்பு வரை அக்.10ம் தேதியும், 6 முதல் 12ம் வகுப்பு வரை அக்.6ம் தேதியும் நேரடி வகுப்புகள் தொடங்கும் என கல்வித்துறை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அரசின் இந்த காலாண்டு விடுமுறை அறிவிப்பையடுத்து பள்ளி மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.