தமிழகத்தில் உள்ள பள்ளிகளுக்கான அனைத்து வகுப்புகளும் வரும் ஜூன் 7ம் தேதி முதல் தொடங்க உள்ளது. இதனால், புதிய கல்வி ஆண்டை எதிர்நோக்கி உள்ள மாணவர்கள் அனைவரும், ஸ்கூல் பேக், வாட்டர் பாட்டில்ஸ், நோட் புக்ஸ் உள்ளிட்ட பொருட்களை வாங்குவதற்கான வேலைகளில் மும்முரமாக இறங்கி உள்ளனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
மாணவர்களுக்கு ஏற்ற வகையில், கடைகளிலும் இதற்கான விற்பனைகள் களைகட்டத் தொடங்கி உள்ளது. இந்நிலையில், வழக்கத்தை விட நோட்டு புத்தகங்கள் அதிக விலைக்கு விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. அதாவது, கொரோனா காலகட்டத்தில் ஆன்லைன் வகுப்புகள் தான் நடைபெற்றது. இதனால், நோட்டு புத்தகங்களின் பயன்பாடும் அதன் விலையும் குறைய தொடங்கியது.
என்னது., கார்த்தியின் 27 வது படத்தில் இவர் தான் வில்லனா?? லீக்கான அதிகாரபூர்வ தகவல்!!
ஆனால், கடந்த 2 ஆண்டுகளாக நேரடி வகுப்புகள் ஆரம்பிக்க பட்டதையடுத்து நோட்டு புத்தகங்களின் தேவை அதிகரிக்கவே, அவற்றின் விலையும் உயர்ந்தது. இதன் தொடர்ச்சியாக, 400 பக்கங்கள் கொண்ட லாங் சைஸ் நோட்டு ரூ.200-லிருந்து ரூ.225 ரூபாய்க்கும், அனைத்து பாடத்திற்கும் உள்ள உரைநடை கைடு ரூ. 500-க்கு மேலாகவும் விற்கப்படுவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கடந்த ஆண்டை விட 10 % அதிகரித்து உள்ளதாகவும் புள்ளி விவரம் தெரிவிக்கப்பட்டுள்ளது.