தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – இதை செய்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்! கல்வித்துறை எச்சரிக்கை!!

0
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு - இதை செய்தால் ஒழுங்கு நடவடிக்கை பாயும்! கல்வித்துறை எச்சரிக்கை!!

ஒழுங்கீனமாக நடந்து கொள்ளும் பள்ளி மாணவர்கள் மீது, நடவடிக்கை எடுக்கப்படுவதுடன், பள்ளியில் இருந்து நீக்கம் செய்யப்படுவார்கள் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சட்டசபையில் அறிவித்துள்ளார்.

அமைச்சர் எச்சரிக்கை:

தமிழக சட்டப்பேரவை கடந்த மாதம் தொடங்கி, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பல்வேறு அறிவிப்புகள் வெளியாகிய வண்ணம் இருக்கிறது. அந்த வகையில், கடந்த சில தினங்களாக, பள்ளி மாணவர்கள் சிலர் வகுப்பறைகளில் ஆசிரியர்களிடம் ஒழுங்கீனமாக நடந்து வருகிறார்கள். ஆசிரியர்களை ஒருமையில் திட்டுவது, அவர்களை அடிக்க பாய்வது போன்ற தவறான நடவடிக்கைகளில், மாணவர்கள் சமீப காலமாக ஈடுபட்டு வருகின்றனர்.

இதுகுறித்த, புகார்கள் அரசின் கவனத்துக்கு வந்துள்ளது. இனி இதுபோன்ற நடவடிக்கைகளில், மாணவர்கள் ஈடுபட்டால் அவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பள்ளி மாற்றுச் சான்றிதழில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டீர்கள் என பதிவிடப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் எச்சரித்துள்ளார். மேலும் மாணவர்கள் வகுப்பறைக்கு செல்போன் கொண்டு வருவது முற்றிலும் தடுக்கப்படும் என்றும், அடுத்த கல்வி ஆண்டு தொடங்கியதும் மாணவர்களுக்கான போதனை வகுப்புகள் நடத்தப் பட்ட பின்னரே, பாடங்கள் நடத்தப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here