தமிழக பள்ளி மாணவர்களுக்கு இதுவரை நடைமுறையில் இருந்த, பருவ தேர்வு முறை மாற்றப்பட்டு, இனி தொகுத்தறியும் திறன் தேர்வு நடைமுறை இந்த ஆண்டு முதல் நடைமுறைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
தேர்வில் மாற்றம்:
தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, இன்று முதல் காலாண்டு தேர்வு தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரத்திற்கு நடைபெறும் இந்த தேர்வு, முடிந்ததும் அக்டோபர் 1 முதல் காலாண்டு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அரசு பள்ளிகளில் கற்பித்தல் முறைகளில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் கல்வித்துறை, தற்போது அரசு பள்ளிகளில் 4 மற்றும் 5ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கென்று புதிய நடைமுறையை அமல்படுத்தியுள்ளது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
அதாவது இந்த மாணவர்களுக்கான பருவத் தேர்வு முறை மாற்றப்பட்டு, மாநிலம் முழுவதும் ஒரே வினாத்தாள் அடிப்படையில் தொகுத்தறியும் திறன் தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனரகம் சார்பில், சம்பந்தப்பட்ட ஆசிரியர்களின் செல்போன் மூலம் இந்த தேர்வு நடத்தப்படுகிறது.
தமிழக மக்களே உஷார் – இன்று 34 மாவட்டங்களில் மழை கொட்ட போகுது! உங்க பகுதியும் இருக்கானு பாருங்க!!
இந்த ஆண்டு முதல், மாணவர்களுக்கான இந்த தொகுத்தறியும் திறன் தேர்வு , பொதுத்தேர்வு க்கு இணையாக நடத்தப்படுகிறது. முதல் 3 நாட்கள் இந்த தேர்வு முடிக்கப்பட்டு, அதன் மொத்த மதிப்பீடுகள் நேரடியாக கல்வி அமைச்சகத்துக்கு அறிக்கையாக அனுப்பப்பட உள்ளதாக கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.