தமிழக பள்ளிகளில் இதற்கு மட்டும் வாய்ப்பே இல்லை – கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!

0
தமிழக பள்ளிகளில் இதற்கு மட்டும் வாய்ப்பே இல்லை - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!
தமிழக பள்ளிகளில் இதற்கு மட்டும் வாய்ப்பே இல்லை - கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி!!

தமிழகத்தில் உள்ள பள்ளிகளில், இந்த வகுப்புகள் மட்டும் நடைபெற அனுமதிக்கவே மாட்டோம் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் திட்டவட்டமாக அறிவித்துள்ளார்.

அமைச்சர் அதிரடி:

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு, வருகிற திங்கட்கிழமை உள்ள காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற உள்ளது. இந்தத் தேர்வுக்காக ஆசிரியர்கள் மாணவர்களை, தீவிரமாக தயார் செய்து வருகின்றனர். தேர்வு முடிந்ததும் பள்ளிகளுக்கு அக்டோபர் 1ஆம் தேதி முதல் விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில், தஞ்சை தமிழ் பல்கலையில் பசுமை இயக்கம் சார்பில் நடந்த மரக்கன்று நடும் விழாவில் பங்கேற்ற கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்ததாவது, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஆர் எஸ் எஸ் வகுப்புகள் நிச்சயம் நடத்தப்படாது என திட்டவட்டமாக அறிவித்தார்.

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு இல்லை? முடிவிலிருந்து திடீரென பின்வாங்கிய அரசு!!

ஆளும் பாஜக அரசின், முக்கிய அமைப்புகளின் ஒன்றான ஆர்எஸ்எஸ் வகுப்புக்கு தமிழகத்தில் இடமில்லை என்பது அமைச்சரின் இந்த அறிவிப்பால் உறுதியாகியுள்ளது. அமைச்சரின் இந்த அதிரடி அறிவிப்பு, அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here