பெற்றோர்கள் மத்தியில் கொரோனா அச்சம் இருப்பதால் 1 முதல் 8 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு செய்யவில்லை என பள்ளிக்கல்வித்துறை அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
குறைந்த கொரோனா தொற்றால் செப் 1 ஆம் தேதி 9,10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பள்ளி மாணவர்களுக்கு வகுப்புகள் திறக்கப்பட்டது. ஆனால் பள்ளிகள் திறந்து சில நாட்களிலேயே சில மாணவர்களுக்கு தொற்று ஏற்பட்டதால் பெற்றோர்களுக்கு தற்போது உள்ள சுழல் தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்ப சாதகமானது இல்லையோ என்ற எண்ணம் ஏற்பட்டது.
இந்நிலையில் மீதமுள்ள ஒன்று முதல் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது பற்றி ஆலோசனை நடத்தப்பட்டது. இந்நிலையில் கொரோனா தொற்று நோய் அச்சம் தொடர்ந்து நிலவுவதால் பள்ளிகள் திறப்பது குறித்து தற்போது வரை முடிவு செய்யவில்லை என்றும் கொரோனா காலத்தில் குழந்தைகளை பள்ளிக்கு வர கட்டாயப்படுத்தக் கூடாது எனவும் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்