தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு – கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!

0
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு - கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!
தமிழக பள்ளி மாணவர்களுக்கு காலாண்டு தேர்வு விடுமுறை நீட்டிப்பு - கல்வித்துறை அதிகாரப்பூர்வ உத்தரவு!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான காலாண்டு தேர்வு பொது விடுமுறை, நீட்டிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

காலாண்டு விடுமுறை:

தமிழகத்தில் உள்ள பள்ளி மாணவர்களுக்கு நேற்று முதல் காலாண்டு தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. வாரம் முழுவதும் நடைபெறும் இந்த தேர்வு முடிந்ததும், வருகிற அக்டோபர் 1ம் தேதி முதல் மாணவர்களுக்கு காலாண்டு விடுமுறை அளிக்கப்பட உள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த நிலையில் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான, பள்ளி மாணவர்களுக்கு அக்டோபர் 1 முதல் 9ஆம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது இந்த அறிவிப்பில் மாற்றம் செய்யப்பட்டு, அக்டோபர் 12 ஆம் தேதி வரை இந்த விடுமுறை நீட்டிக்கப்படுவதாக கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில் நகை கடன் தள்ளுபடி பெறாதவர்களே – உங்களுக்கு கடைசி வாய்ப்பு! கூட்டுறவு துறை உறுதி!!

தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு 2ம் பருவத்திற்கான எண்ணும் எழுத்தும் பயிற்சி, அக்டோபர் 10 முதல் 12 ம் தேதி வரை நடக்க உள்ளதால், இந்த விடுமுறை நீட்டிக்கப்பட்டுள்ளதாக கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. கல்வித்துறையின் இந்த அறிவிப்பால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here