தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் வேகம் எடுத்துள்ளதால், வகுப்புகளை சுழற்சி முறையில் நடத்த, வாய்ப்புள்ளதா? என பள்ளி கல்வித்துறை ஆலோசனை நடத்தி வருவதாக தகவல் கிடைத்துள்ளது.
மீனாவின் கணவரை தொடர்ந்து நுரையீரல் தொற்றால் இறந்த திரை பிரபலம் – ரசிகர்கள் கண்ணீர்!!
பெற்றோர்கள் கருத்து :
தமிழகத்தில் கோடை விடுமுறைக்கு பின், பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. விரைவில் 11, 12 ம் வகுப்பு மாணவர்களுக்கான வகுப்புகள் தொடங்க உள்ளது. இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில தினங்களாக, மீண்டும் வைரஸ் பரவல் வேகம் எடுத்துள்ளது.
இதையடுத்து பள்ளி மாணவர்கள் உடல் நிலையை கருத்தில் கொண்டு, மீண்டும் சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த தனியார் பள்ளிகள் திட்டமிட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகளை நடத்த வாய்ப்பு உள்ளதா? என பெற்றோரிடம் கருத்து கேட்டு வருகிறது.
இதையடுத்து பெற்றோர்கள் கூறும் பதிலை பொறுத்து பள்ளிகளை நடத்த முடிவு செய்திருப்பதாக சிபிஎஸ்இ பள்ளிகள் சங்க மாநிலத் தலைவர் ஆர்.கே.நந்தகுமார் தெரிவித்துள்ளார். இது குறித்த முக்கிய அறிவிப்புகள் அதிகாரப்பூர்வமாக வெளியாகும் வரை, தொடர்ந்து தமிழக அரசின் உரிய வழிகாட்டுதலுடன் வகுப்புகள் நடத்தப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்