தமிழகத்தில் பரவி வரும் இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அறிவிப்பது குறித்த முக்கிய கருத்து ஒன்றை அமைச்சர், திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
அமைச்சர் திட்டவட்டம் :
தமிழகத்தில், கடந்த சில தினங்களாக குழந்தைகளுக்கு இன்ஃப்ளுயன்சா என்ற காய்ச்சல் பாதிப்பு மோசமாக இருந்து வருகிறது. இதனால், 1 முதல் 9ம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை அளிக்க வேண்டும் என பலரும் கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இதுகுறித்து விளக்கம் அளித்த அமைச்சர், தமிழகத்தில் வைரஸ் காய்ச்சல் கட்டுக்குள் இருந்து வருவதால் விடுமுறை விட வேண்டிய அவசியம் இல்லை. அது மட்டும் இல்லாமல் மாணவர்களுக்கு காய்ச்சல் உள்ளிட்ட உடல் பாதிப்புகள் இருந்தால், அவர்களை இரண்டு மூன்று நாட்களுக்கு பள்ளிக்கு அனுப்ப வேண்டாம் என்று வலியுறுத்தியுள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
அரசின் இந்த முடிவால், காய்ச்சல் பாதிப்பால் தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு விடுமுறை என்ற பேச்சுக்கே இடமில்லை என்பது உறுதியாகி உள்ளது.