தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு மற்றும் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்துள்ள நிலையில் கோடை விடுமுறை விடப்பட்டுள்ளது. மேலும் 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகளையும் அரசு வெளியிட்டிருந்தது. தமிழகத்தில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 94.03% பேர் தேர்ச்சியடைந்திருந்தனர். அதே போல 91.39% பேர் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில்
தேர்ச்சியடைந்திருந்தனர்.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
தமிழகத்தில் குட்கா, பான் மசாலா புகையிலை பொருட்களுக்கு ஓராண்டு தடை – அரசு அதிரடி உத்தரவு!!
இப்படி இருக்க கோடை விடுமுறை முடிவுக்கு வர உள்ள நிலையில் இது மேலும் நீடிக்கப்படுமா?? என்று மாணவர்கள் ஆர்வத்துடன் உள்ளனர். அதாவது வெயிலின் தாக்கம் இன்னும் தணியாமல் இருப்பதால் சில மாநிலங்களில் விடுமுறை நீடிக்கப்பட்டிருந்தது. மேலும் தமிழகத்திலும் விடுமுறையை நீடிக்கும்படி கோரிக்கை வைக்கப்பட்டிருந்தது. இந்த சூழ்நிலையில் தான் அன்பில் பேட்டியளித்துள்ளார். அதாவது, வெயில் தாக்கம் காரணமாக கோடை விடுமுறையை நீடிக்கும்படி கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளது. விடுமுறையில் எதுவும் மாற்றம் இருந்தால் கண்டிப்பாக முதல்வர் ஸ்டாலின் அதனை தெரிவிப்பார் என்று கூறியுள்ளார்.