தமிழக பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட அதிரடி மாற்றம் – புதிய வழிமுறைகளை வெளியிட்டு அரசு உத்தரவு!!

0
தமிழக பள்ளிகளில் கொண்டு வரப்பட்ட அதிரடி மாற்றம் - புதிய வழிமுறைகளை வெளியிட்டு அரசு உத்தரவு!!

தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண் சான்றிதழ்களை வேலைவாய்ப்பு இணைய தளத்தில் அவர்களின் பள்ளிகளே பதிவேற்றம் செய்யும் நடைமுறையில் அதிரடி மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

நடைமுறையில் மாற்றம்:

தமிழகத்தில் கொரோனா பரவலுக்கு பின் பள்ளிகள் திறக்கப்பட்டு, கடந்த ஓராண்டாக நேரடி வகுப்பு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் மாணவர்களின், மன அழுத்தத்தை போக்க அரசால் தொடர்ந்து  கவுன்சிலிங் உள்ளிட்ட வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், பள்ளிகளில் இதுவரை நடைமுறையில் இருந்து வந்த  ஒரு செயல்முறை அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதாவது, 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை, தாங்கள் படித்த பள்ளிகளிலேயே வேலைவாய்ப்பு இணையதளத்தில் பதிவு செய்யும் நடைமுறை இதுவரை இருந்து வந்தது. தற்போது இந்த நடைமுறை அதிரடியாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதற்கு பதிலாக, மாணவர்கள் நேரிடையாகவோ அல்லது  http://tnvelaivaaippu.gov.in என்ற இணையதளம் வாயிலாகவோ வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்து கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. அரசின் இந்த திடீர் நடவடிக்கையால், பெற்றோர் மற்றும் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here