தமிழகத்தில், கிராமப்புறங்களில் சிறுபான்மையின மாணவிகளின் கல்வி இடை நிற்றலை தவிர்க்க, 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை படிக்கும் மாணவிகளுக்கு 500 ரூபாயும், 6ம் வகுப்பு பயிலும் மாணவியருக்கு 1000 ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை அறிவிப்பு:
தமிழக சட்டப்பேரவை, கடந்த மாதம் தொடங்கி தற்போது வரை நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், சிறுபான்மையினர் நலத்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்தில், அத்துறையின் அமைச்சர் கே.எஸ் மஸ்தான் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதாவது, கிராமப்புறங்களில் உள்ள சிறுபான்மையின மாணவியரின் கல்வி இடைநிற்றலை தவிர்க்கவும், தொடர்ந்து அவர்களின் கல்வியை ஊக்குவிப்பதற்காகவும் உதவித்தொகை வழங்கப்பட உள்ளதாக அமைச்சர் அறிவித்துள்ளார்.
அதாவது, 3ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை பயிலும் மாணவியருக்கு 500 ரூபாயும், 6ம் வகுப்பு மாணவியருக்கு 1,000 ரூபாயும் உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக, 2 கோடியே 75 லட்சத்து 60 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். இந்த திட்டத்தின் மூலம் பல, சிறுபான்மையின மாணவிகள் பயனடைவார்கள் என அமைச்சர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்