பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்களுக்கு, இன்புளுயன்சா எனப்படும் வைரஸ் காய்ச்சல் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
மருத்துவர்கள் அறிக்கை:
தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக, கடந்த ஒரு ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்து வருபவர் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி. இவருக்கு நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டதன் காரணமாக, சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
காய்ச்சல் தொற்று இருப்பதால் 2 நாட்களுக்கு, மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற வேண்டும் என மருத்துவர்கள் வலியுறுத்தினர். இந்த நிலையில் இவருக்கு, நேற்று ரத்த பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில், அவருக்கு H1N1 வகை இன்புளுயன்சா வைரஸ் காய்ச்சல் இருப்பது உறுதியாகியுள்ளது.
தமிழகத்தில் ஆம்னி பேருந்து கட்டண உயர்வு.,, அமைச்சர் சிவசங்கர் அறிவுரை!!
இதுகுறித்து பேசிய மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர், பருவநிலை மாற்றம் காரணமாக அமைச்சருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும், தனிமையில் சிகிச்சை பெற்று வரும் அவரின், உடல்நிலை சீராக இருப்பதால் விரைவில் வீடு திரும்புவார் என நம்பிக்கை தெரிவித்துள்ளார்.