
தமிழகத்தில் வருகிற நவ.12 ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, வெளியூர்களில் தங்கி பணிபுரிபவர்கள் பலரும் சொந்த ஊருக்கு செல்ல தயாராகி வருகின்றனர். ஆனால் நடப்பாண்டில் தீபாவளி பண்டிகை ஞாயிற்றுக்கிழமை வருவதால், திங்கட்கிழமை வேலைக்கு செல்ல ஞாயிறு இரவே தயாராக வேண்டி வரும் என பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் திங்கட்கிழமை பொது விடுமுறையாக அறிவிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசிடம் பலரும் கோரிக்கை வைத்து வந்தனர்.
Enewz Tamil WhatsApp Channel
இதனை கருத்தில் கொண்டு தீபாவளிக்கு மறுநாளான திங்கட்கிழமை (நவ.13) பொது விடுமுறையாக அரசு அறிவித்துள்ளது. மேலும் இந்த விடுமுறையை ஈடுசெய்ய நவ.18ஆம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக கருதப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இந்த அறிவிப்பு மாணவர்கள், ஆசிரியர்கள், அலுவலர்கள் மட்டுமல்லாமல் வெளியூர் செல்லும் பொதுமக்களும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.