தமிழகத்தில், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள புகழ்பெற்ற ஒரு பள்ளிக்கு, நேற்றும் இன்றும் தொடர்ந்து இரண்டு நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
2 நாள் விடுமுறை:
தமிழகத்தில், கொரோனா பரவலுக்கு பின் கடந்த 2 ஆண்டுகளாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. காலாண்டு தேர்வு நெருங்கி வருவதால், அதற்குரிய பாடத்திட்டத்தை முடிக்க ஆசிரியர்கள் முனைப்புடன் செயல்பட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருவாரூர் மாவட்டத்தின் பொன்னேரி அருகே உள்ள புகழ்பெற்ற தனியார் பள்ளியில், தொடர்ந்து இரண்டு நாட்களாக, அதாவது நேற்றும் இன்றும் விடுமுறை விடப்பட்டுள்ளது.
பள்ளிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்திருப்பதாக, போலீசார் தரப்பிலிருந்து அறிவிக்கப்பட்டு, பின் அது வதந்தி என முடிவு செய்யப்பட்டது. இந்த வதந்தியை பரப்பிய நபர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
நாட்டில் பொருளாதார நெருக்கடி எதிரொலி.., ஆன்லைன் வர்த்தக சேவைகள் நிறுத்தம்….!!
இதையடுத்து, பள்ளிக்கு விடுமுறை விடப்படுவதாக பள்ளி நிர்வாகம் அறிவித்துள்ளது. புகழ் பெற்ற தனியார் பள்ளிக்கு, வெடிகுண்டு மிரட்டல் வந்திருப்பது அப்பகுதியில் உள்ள பெற்றோர்கள் மற்றும் மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.