தமிழக பள்ளிகளுக்கு புதிய உத்தரவு., பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

0
தமிழக பள்ளிகளுக்கு புதிய உத்தரவு., பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கல்வித்துறை அமைச்சர் அதிரடி!!

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், மாநிலத்தில் உள்ள பள்ளி கட்டிடங்கள் குறித்த புதிய உத்தரவு ஒன்றை கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பிறப்பித்துள்ளார்.

அமைச்சர் உத்தரவு:

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி வெளுத்து வாங்கி வருகிறது. மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு நெருங்கி வரும் இந்த நேரத்தில், கனமழை காரணமாக ஒரு சில மாவட்டங்களில், மாவட்ட நிர்வாகத்தால் விடுமுறை விடப்பட்டு வருகிறது. இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும் என பெற்றோர்கள் கருதினர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இதையடுத்து சனிக்கிழமைகளில் வகுப்புகளை நடத்த, ஆலோசனை நடத்தி வருவதாக கல்வித்துறை அமைச்சர் தெரிவித்தார். இந்த நிலையில், பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக பள்ளி கட்டிடங்கள் குறித்த புதிய உத்தரவு ஒன்றை அமைச்சர் பிறப்பித்துள்ளார்.

அதாவது, பருவமழை காரணமாக தமிழகம் முழுவதும் உள்ள சிதிலமடைந்த அரசு பள்ளி கட்டிடங்களை இடிக்க உத்தரவு பிறப்பித்துள்ளதாகவும், விரைவில் புதிய கட்டிடங்களுக்கான கட்டுமான பணி தொடங்கும் என்றும் தெரிவித்துள்ளார். மாணவர்களின் நலன் கருதி அமைச்சர் எடுத்துள்ள இந்த அதிரடி நடவடிக்கைக்கு பெற்றோர் உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here