தமிழக 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களே…, பொதுத் தேர்வுக்கான அட்டவணை தயார்…, அன்பில் மகேஷ் பளிச் பேட்டி!!

0
தீபாவளி பண்டிகை சமீபத்தில் முடிவடைந்ததை அடுத்து, நாடு முழுவதும் உள்ள மக்கள் அனைவரும் தங்களது அன்றாட பணிக்கு திரும்பி உள்ளனர். இதை போல, இன்று (நவம்பர் 14) முதல் வழக்கம் போல தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இயங்கி வருகின்றன. இந்நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி 10 மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கான பொது தேர்வு குறித்து முக்கிய அப்டேட்டை வெளியிட்டுள்ளார்.
அதாவது, நாடாளுமன்ற தேர்தல், நீட் தேர்வு உள்ளிட்டவை கருத்தில் கொண்டு, பள்ளி மாணவர்களுக்கான பொது தேர்வுக்கு எவ்வித குறிக்கீடும் ஏற்படாத வகையில் 3 வகையாக அட்டவணை தயார் செய்து அடுத்த சில நாட்களில் வெளியிடப்படும் என்று தெரிவித்துள்ளார். மேலும், பள்ளிகளில் மழை காரணமாக அளிக்கப்பட்ட விடுமுறையை ஈடுசெய்ய சனிக்கிழமைகளில் பள்ளிகள் செயல்படும் என தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here