
தமிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படும் என தி.மு.க. அரசு தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்து இருந்தது. பின்னர் நிதி நிலைமை உள்ளிட்ட காரணங்களால் தகுதியான மகளிர்களுக்கு மட்டும் ரூ.1,000 உரிமை தொகை வழங்கப்படுவதாக கூறி, விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
இதன்மூலம் 1.06 கோடி குடும்பத்தலைவிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு ரூ.1,000 உரிமை தொகை வழங்கும் கலைஞர் மகளிர் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (செப்டம்பர் 15) தொடங்கி வைத்தார். இந்த நிலையில் தி.மு.க. தேர்தல் வாக்குறுதியில் தெரிவித்தது போல் அனைத்து குடும்பத்தலைவிகளுக்கும் ரூ.1,000 உரிமை தொகை வழங்க வேண்டும் என அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் நிபா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு? அமைச்சர் மா.சுப்பிரமணியன் பதில்!!!