தமிழகத்திற்கு ரெட் அலெர்ட்.. இந்த நாட்களில் மக்கள் மிக கவனமா இருக்கனும் – வானிலை ஆய்வு மையம்!!

0

கடந்த பல வாரங்களாக தமிழகத்தில் மழை பெய்து வருகிறது. மேலும் மாநிலத்தில் வரும் ஆகஸ்ட் 29 மற்றும் 30 ஆம் தேதிகளில் அதீத கனமழை பெய்யும் என்பதால் ரெட் அலர்ட் விடப்பட்டுள்ளது.

வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, இன்று தமிழகத்தில் செங்கல்பட்டு, திண்டுக்கல், நீலகிரியில், கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 29 ஆம் தேதியில் கோவை, திருப்பூர், தென்காசி ஆகிய நகரங்களில் அதீத கனமழை பெய்யும்.

அதே போல 30 ஆம் தேதி நீலகிரி, கோவை, திருப்பூரில் அதீத கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இதனால் இந்த இரு தினங்களில் தமிழகத்திற்கு ரெட் அலெர்ட் விடப்பட்டுள்ளது. நாளை (ஆகஸ்ட் 26, 2021) விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திண்டுக்கல், நீலகிரி, கடலூர் ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் பரவலாக 30-ம் தேதி வரை கன மழை பெய்ய வாய்பு உள்ளதாக சென்னை வானிலை மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. இதனால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here