தமிழக ரேஷன் கடைகளில் இனி தரமான உணவு பொருட்கள் வழங்குதலை உறுதி செய்ய, மாவட்டந்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்புக் குழுவை அமைத்து மாநில உணவுத்துறை உத்தரவிட்டுள்ளது.
பாக்கவே கண்ணு கூசுது., படு கேவலமான உடையில் மொத்தத்தையும் காட்டிய யாஷிகா – திணறி நிற்கும் ரசிகர்கள்!
உணவுத்துறை அதிரடி:
தமிழகத்தில் பொது விநியோக திட்டத்தின் கீழ், உணவு வழங்கல் துறை வாயிலாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்கள் மூலம், சாமானிய மக்கள் மிகவும் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், ரேஷன் கடைகளில் வழங்கப்படும் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் தரமானதாக இல்லை என சமீப காலமாக குற்றம் சுமத்தப்பட்டு வருகிறது. தற்போது, இதனைத் தடுப்பதற்காக அதிரடி நடவடிக்கை ஒன்றை மாநில உணவுத்துறை எடுத்துள்ளது.
அதாவது, ரேஷன் கடைகளில் இனி தரமான உணவு பொருட்கள் வழங்கப்படுகிறதா? என்பதை கண்காணிக்க மாவட்டந்தோறும் 4 அதிகாரிகள் கொண்ட கண்காணிப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது. இவர்கள், மாதந்தோறும் முதல் மற்றும் 3வது திங்கள் கிழமைகளில் ரேஷன் கடைகளில் ஆய்வு மேற்கொண்டு இது குறித்த அறிக்கையை உணவுத் துறையிடம் சமர்ப்பிப்பார்கள் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது நுகர்வோரிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்