தமிழக ரேஷன் கார்டுதாரர்களுக்கு குட் நியூஸ் – இனி கால் கடுக்க நிற்க தேவையில்லை! பயனர்கள் நிம்மதி!!

0

தமிழகத்தில், மின்னணு பதிவேட்டின் மூலம் பதிவு செய்யப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு நிலையில், அதை மாற்றுவதற்காக முக்கிய அறிவிப்பு ஒன்றை அமைச்சர் வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் அதிரடி:

தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த மலிவு விலை ரேஷன் பொருட்களால், பல சாமானிய மக்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த ரேஷன் கார்டுகளில் ஏற்படும் குளறுபடிகளை தடுக்க, ஸ்மார்ட் கார்டு திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியது.
இந்த ஸ்மார்ட் கார்டுகளை மின்னணு பதிவேட்டில், ஸ்கேன் செய்து, பயனர்கள் தங்கள் பெருவிரல் ரேகையை பதிவு செய்த பின் இதுவரை பொருட்கள் வழங்கப்பட்டு வந்தது. இந்த மின்னணு பதிவேட்டில் அடிக்கடி கோளாறுகள் ஏற்படுவதால் பொதுமக்கள் சிரமத்தை அனுபவித்து வந்தனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

தற்போது அதை தவிர்க்கும் விதமாக, வருகிற அக்டோபர் 15ஆம் தேதிக்குள்  கருவிழி மூலம் ரேஷன் பொருட்கள் வழங்குவதற்கு ஏற்பாடு செய்யப்படும்  என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவித்துள்ளார். அமைச்சரின் இந்த அறிவிப்பால், ரேஷன் பயனர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here