தமிழக ரேஷன் ஊழியர்களுக்கு குட் நியூஸ் – இன்னும் ஒரு வாரத்தில் முக்கிய அறிவிப்பு! அமைச்சர் உறுதி!!

0
தமிழகத்தில் புது ரேஷன் கார்டுகள் எப்போது கிடைக்கும்? அறிவிப்பு வெளியீடு.., முழு விவரம் இதோ!!!

தமிழக ரேஷன் கடை ஊழியர்களுக்கு அகவிலைப்படி ஊதிய உயர்வு அளிப்பது குறித்து இன்னும் ஒரு வாரத்துக்குள் அறிவிக்கப்படும் என கூட்டுறவு துறை அமைச்சர் ஐ. பெரியசாமி அறிவித்துள்ளார்.

அமைச்சர் உறுதி :

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் அரசு ஊழியர்களுக்கான 7வது ஊதியக்குழு பரிந்துரைப்படி, சம்பள உயர்வு வழங்கப்பட்டது. இதனைத்தொடர்ந்து, நியாயவிலைக் கடைகளில் பணிபுரியும் தங்களுக்கும் அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும் என, பல்வேறு மாவட்ட ரேஷன் கடை ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கொரோனா காலத்திலும், தாங்கள் ஓய்வில்லாமல் வேலை செய்ததாகவும், தங்களுக்கும் அகவிலைப்படி ஊதிய உயர்வு அளிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஜூன் 7ஆம் தேதி முதல் தொடர்ந்து 3 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இதுகுறித்து, பேசிய கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ. பெரியசாமி முக்கியத் தகவல் ஒன்றை தெரிவித்துள்ளார். அதாவது, அரசு ஊழியர்களுக்கு உயர்த்தப்படுவது போல் ரேஷன் கடை ஊழியர்களுக்கும் அகவிலைப்படி கட்டாயம் ஊதியம் உயர்த்தப்படும் எனவும், அதற்கான நல்ல முடிவு இன்னும் ஒரு வாரத்திற்குள் எடுக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். இதையடுத்து நியாயவிலைக் கடை ஊழியர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here