தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், பணிபுரியும் ரேஷன் ஊழியர்கள் இதை மட்டும் செய்யவே கூடாது என மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார்.
அதிரடி உத்தரவு:
தமிழகத்தில் பொது விநியோகத் திட்டத்தின் கீழ், மலிவு விலையில் ரேஷன் பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த ரேஷன் பொருட்களால் வறுமை கோட்டுக்கு கீழ் உள்ள பல மக்கள் பயனடைந்து வருகின்றனர். தற்போது ரேஷன் கடைகளில் அரிசி, கோதுமை, சர்க்கரை மற்றும் பாமாயில் போன்ற பொருட்களை தவிர ஒரு சில பொருட்கள் கூடுதலாக விற்பனை செய்யப்படுகிறது. இவற்றை வாங்கினால் தான், அத்தியாவசிய பொருட்கள் வழங்குவோம் என ஊழியர்கள் வாடிக்கையாளர்களை மிரட்டி வருகின்றனர்.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
WhatsApp பயனர்களுக்கு ஹாப்பி நியூஸ்.,, இனிமேல் இதெல்லாம் பண்ணவே முடியாது!!
இது குறித்து தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளை ஆய்வு செய்த பின் பேசிய, மத்திய உணவு மற்றும் பொது விநியோகத் துறை செயலர் சுதன்சு பாண்டே, ரேஷன் கடை ஊழியர்களின் இத்தகைய செயல் கண்டிக்கத்தக்கது என்றும், இது போன்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால் விளைவுகள் மோசமாக இருக்கும் என எச்சரிக்கை விடுத்துள்ளார். மேலும், விருப்பமில்லாத பொருட்களை வாங்கச் சொல்லி கட்டாயப்படுத்தினால் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.