தமிழக ரேஷன் கடைகள் மற்றும் கூட்டுறவு பல்பொருள் அங்காடிகளில் 2 மற்றும் 5 கிலோ சமையல் சிலிண்டர்களை விற்பனை செய்யும் திட்டம், நாளை முதல் தொடங்கப்பட்டு அமலுக்கு வர உள்ளது.
நாளை துவக்கம் :
நாடு முழுவதும் அரசின் மூலம் 14.2 மற்றும் 19 கிலோ எடை கொண்ட சிலிண்டர்கள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த சிலிண்டர் இணைப்பை பெற இருப்பிட சான்று அவசியம். இந்த நிலையில், சென்னை உட்பட்ட பெரு நகரங்களில் தங்கியுள்ள வெளிமாநிலத்தவர், சாலையோர கடை வியாபாரிகள், பணி நிமித்தம் காரணமாக வெளியூரில் தங்கி பணிபுரியும் மக்கள் ஆகியோரின் நலனுக்காக இந்த திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
இந்த திட்டம் குறித்து அண்மையில் பேசிய கூட்டுறவு துறை அமைச்சர், விரைவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும் என உறுதி அளித்தார். அதன்படி அக்டோபர் 6ம் தேதியான நாளை சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள கூட்டுறவு பல்பொருள் அங்காடியில் இத்திட்டம் துவக்கப்பட உள்ளது. இதன் மூலம், 2 கிலோ எடை கொண்ட சிலிண்டர் விலை ரூ. 958 ஆகவும், 5 கிலோ எடை கொண்ட சிலிண்டர் ரூ.1515 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
தமிழக பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவு – இன்று கண்டிப்பாக இதை முடிங்க! கல்வி இயக்குநர் சுற்றறிக்கை!!
சர்வதேச சந்தை நிலவரத்தை பொறுத்து இந்த விலையில் மாற்றங்கள் ஏற்படலாம். தற்போது இந்த மாதம் சென்னையில் 2 கி எடை கொண்ட சிலிண்டர் ரூ.250க்கும், 5 கி எடை கொண்ட சிலிண்டர் ரூ. 575.50க்கும் விற்பனை செய்யப்பட உள்ளது. ரேஷன் கடையில் சிலிண்டர் விற்பனை செய்யும் அரசின் இந்த புதிய திட்டத்திற்கு, பயனர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.