தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில், புதிய விதிகளை நடைமுறைப்படுத்துவது குறித்து, உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.
அமைச்சர் அறிவிப்பு:
தமிழகத்தில் 2,39,803 அங்கீகரிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உள்ளனர். இவர்களில், 98.23 சதவீத கார்டுதாரர்களுக்கு கைரேகை சரிபார்ப்பின் மூலம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், தமிழக ரேஷன் கடைகளில் அமலாக உள்ள புதிய விதிமுறைகள் குறித்து உணவு வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி முக்கிய கருத்து ஒன்று தெரிவித்துள்ளார்.
அதாவது, இனி ரேஷன் கார்டில் உள்ள குடும்ப உறுப்பினர்கள் எவராக இருந்தாலும் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுபோக வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் உடல் நலம் பாதிக்கப்பட்டோர் தங்களது பிரதிநிதிகள் மூலம் இந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இது போக, மகாராஷ்டிரா, அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் உள்ள கண் கருவிழி சரிபார்ப்பின் மூலம் பொருட்கள் வழங்கும் நடைமுறையை சோதனை அடிப்படையில், தமிழகத்தில் செயல்படுத்தப்பட உள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்