தமிழகத்தில் தொடர் ஸ்டிரைக் அறிவித்த ரேஷன் ஊழியர்கள் – திடீர் போராட்டத்தால் அதிர்ச்சியில் மக்கள்!!

0
தமிழகத்தில் தொடர் ஸ்டிரைக் அறிவித்த ரேஷன் ஊழியர்கள் - திடீர் போராட்டத்தால் அதிர்ச்சியில் மக்கள்!!
தமிழகத்தில் தொடர் ஸ்டிரைக் அறிவித்த ரேஷன் ஊழியர்கள் - திடீர் போராட்டத்தால் அதிர்ச்சியில் மக்கள்!!

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடை ஊழியர்கள், தங்களுக்கும் அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி தொடர்ந்து 4 நாட்கள் ஸ்டிரைக்கில் ஈடுபட போவதாக அறிவித்துள்ளனர்.

பொதுமக்கள் ஷாக் :

தமிழகத்தில், அண்மையில் நடைபெற்று முடிந்த சட்டப்பேரவைத் கூட்டத்தின் போது, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 30 % உயர்த்தப்படுவதாக முதல்வர் அறிவித்தார். மேலும், 7வது ஊதிய கமிஷன் பென்ஷன் பெறுபவர்கள் , குடும்ப ஓய்வூதியம் பெறுபவர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டு அதிகாரப்பூர்வ அரசாணை வெளியானது. தொடர்ந்து, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி உயர்த்தப்பட்டது வரும் நிலையில், ரேஷன் கடை ஊழியர்களுக்கு மட்டும் எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை.

இதையடுத்து , நாகை மாவட்ட ரேஷன் கடை பணியாளர் சங்கம் இது குறித்து தீவிர ஆலோசனையில் ஈடுபட்டது. இந்த கூட்டத்தில் பேசிய ஒருங்கிணைப்பாளர், தங்களுக்கும் அகவிலைப்படி ஊதிய உயர்வு வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி, வருகிற ஜூன் 10ஆம் தேதி பணியாளர்களுடன் ஒன்று திரண்டு காத்திருப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்துள்ளார். இது போக, ஜூன் 7, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் ஸ்டிரைக் நடத்தப்போவதாக அறிவித்துள்ளார். இதனால் ரேஷன் பொருட்களின் விநியோகம், தடைபடும் என  அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here