தமிழகத்தில் கடந்த பொங்கல் பண்டிகையின் போது ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் வழங்கப்பட்ட நிலையில், வரும் 2023ஆம் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ரொக்கமாக பணம் வழங்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரொக்க பணம்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் வருடம் தோறும் சிறப்பு பரிசுத் தொகுப்பு தமிழ்நாடு அரசு சார்பில் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில் கடந்த 2022ம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு 21 பொருட்கள் உள்ளடங்கிய சிறப்பு பரிசு தொகுப்பு 2.15 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்த வகையில், வரும் 2023ம் ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு மளிகை பொருட்கள் அடங்கிய பரிசு தொகுப்பு அரசு சார்பில் வழங்கப்படும் என மக்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கின்றனர்.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இந்நிலையில் வரும் பொங்கல் பண்டிகையையொட்டி ரேஷன் அட்டைதாரர்களுக்கு மளிகை பொருட்கள் உள்ளடக்கிய சிறப்பு தொகுப்பு வழங்கலாமா? அல்லது 1000 ரூபாய் வழங்கலாமா? என்று முதலமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடந்தி வருவதாக அண்மையில் தகவல் வெளியானது. அதன் படி மக்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் வகையில், அரசு ரேஷன் அட்டைதாரர்களுக்கு ரொக்க பணமாக 1000 ரூபாய், பச்சரிசி, சர்க்கரை, ஆவின் நெய் ஆகியவை வழங்க முடிவு எடுத்து உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
இதன் வாயிலாக 2.20 கோடி அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அதிகாரபூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. ஆனால் அரசியல் வட்டாரங்களில் இது குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.