தமிழ் நாட்டில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் இன்று கீழ் குறிப்பிட்டுள்ள 16 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு என கூறப்பட்டுள்ளது.
ஆந்திரா மற்றும் அதை ஒட்டிய பகுதிகளிலும், தமிழகத்தின் தெற்கு கடலோர பகுதிகளில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியாலும் மற்றும் தென்மேற்கு பருவக்காற்றால் தமிழ் நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மழை இருப்பதாக மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நாளை சென்னை, தென்காசி, திண்டுக்கல், மற்றும் கடலோர நகரங்களிலும், ஜூலை 19 ஆம் தேதி நீலகிரி, சேலம், கோவை, தேனி ஆகிய நகரங்களிலும் மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் சேலம், நாமக்கல், பெரம்பலூர், அரியலூர், நீலகிரி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கோவை, திருவண்ணாமலை,திருப்பத்தூர், தருமபுரி, கள்ளக்குறிச்சி, வேலூர், தேனி, கிருஷ்ணகிரி,ராணிப்பேட்டை ஆகிய 16 மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், மேலும் வட மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் ஆகிய பகுதிகளில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்