தமிழகத்தில் பொதுத்தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களின், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற அறிவிப்பை தேதியுடன் கல்வித்துறை அறிவித்துள்ளது.
வெளியான அறிவிப்பு:
தமிழகத்தில் 10 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு வருகிற மார்ச் 13ஆம் தேதி முதல் ஏப்ரல் 20-ம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. இதற்கான அட்டவணை ஏற்கனவே வெளியிடப்பட்டிருந்த நிலையில், இது குறித்த இறுதி கட்டப் பணிகள் நடைபெற்று வருகிறது.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நிலையில், இந்த மாணவர்களுக்கான செய்முறை தேர்வை, ஏற்கனவே திட்டமிட்டபடி இல்லாமல் முன்கூட்டியே நடத்தி முடிக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்தார். விரைவில் இதற்கான புதிய தேதிகள் வெளியாக உள்ளது. இது ஒரு புறம் இருக்க, தற்போது இந்த பொது தேர்வு மாணவர்களின் தேர்வு முடிவுகள் வெளியாகும் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
பெண்களுக்கான சூப்பர் திட்டம்.., இனி மாதந்தோறும் ரூ.1000.., முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு!!!
அதன்படி, மே 5ம் தேதி 12 ஆம் வகுப்புக்கும், மே 19ஆம் தேதி 11ம் வகுப்புக்கும் மே 17ஆம் தேதி 10ம் வகுப்புக்கும் தேர்வு முடிவுகள் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள் தற்போது முழு வீச்சில் தேர்வுக்கு தயாராகி வருகின்றனர்.