தமிழக காவல்துறையில் பணியாற்றுவது என்பது பல இளைஞர்களின் கனவாக இருந்து வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் ஒரு மகிழ்ச்சியான செய்தியை அவர்களுக்காக வெளியிட்டுள்ளது.
அதாவது தமிழக காவல்துறையில் உள்ள 3,552 இரண்டாம் நிலைக் காவலர் பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பதவிகளுக்கு கல்வித்தகுதியாக 10ம் வகுப்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. காவலர் தேர்வில் முதல் முறையாக பொதுத் தேர்வுடன் தமிழ் மொழித் தகுதித் தேர்வும் அரசு வழிக்காட்டுதலின்படி நடத்தப்படுகிறது.
இந்த பணியிடங்களுக்கு தகுதியான நபர்கள் வருகின்ற ஜூலை 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 15 ஆம் தேதி வரை இரண்டாம் நிலை காவலர்கள், சிறைத்துறையில் உள்ள இரண்டாம் நிலைக் காவலர்கள், தீயணைப்பு வீரர்கள் ஆகிய பணிகளுக்கு ரூ.250 கட்டணம் செலுத்தி https://www.tnusrb.tn.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்பிக்கலாம்.
தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு 2022
தமிழ்நாடு காவல்துறையின் ஆயுதப்படை, தமிழ்நாடு சிறப்பு காவல்படை, சிறைத்துறை மற்றும் தீயணைப்பாளர் பதவிகளுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. மொத்தப் பணியிடங்கள் 3,552. மேலும் விவரங்களுக்கு: https://t.co/aHMObvT1vY.in-ஐ பார்க்கவும். pic.twitter.com/M8v3H8DGzP— Tamil Nadu Police (@tnpoliceoffl) June 30, 2022
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்