தமிழகத்தில் உள்ள வெளிமாநில தொழிலாளர்கள் பற்றிய ஆதார் விவரங்களை சேகரிக்குமாறு, மாநில காவல்துறை அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
அதிரடி உத்தரவு:
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் ஆதார் தனிமனித அடையாளமாக திகழ்கிறது. இந்த ஆதாரில் உள்ள 12 இலக்க தனித்துவமிக்க எண், அரசின் அனைத்து துறைகளிலும் சிறந்த ஆவணமாக பயன்பாட்டில் இருந்து வருகிறது.
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இந்த நிலையில் தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த கோவை கார் குண்டு வெடிப்பு சம்பவத்திலிருந்து, காவல்துறை பாதுகாப்பு நடவடிக்கையை மாநிலம் முழுவதும் முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு வழியாக, தமிழகத்தில் தங்கி இருக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் ஆதார் தகவல்களை சேகரிக்க காவல்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
பெட்ரோல், டீசல் இன்றைய விலை நிலவரம்(30.11.2022)-முழு விவரம் உள்ளே!
இதுபோக, வெளி மாநிலத்தில் இருந்து வந்து தமிழகத்தில் வாடகைக்கு வீடு எடுக்கும் மாணவர்களும் தங்கள் தகவல்களை காவல் துறைக்குத் தர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. காவல்துறையின் இந்த அதிரடி நடவடிக்கைக்கான காரணம் குறித்து இதுவரை இந்த தகவலும் வெளியாகவில்லை.