தமிழகத்தில் பிளஸ் 1 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனுடன் சேர்த்து பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவுகளும் வெளியாகும் என கூறப்பட்டுள்ளது.
பிளஸ் 1 தேர்வு முடிவுகள்:
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு தீவிரமடைவதற்கு முன்பே பிளஸ் 1 பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்தன. மார்ச் மாதம் நடைபெற்ற தேர்வை 8.32 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதினர். இந்த தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (ஜூலை 31) காலை 9.30 மணிக்கு இணையதளத்தில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவர்கள் பதிவு செய்ய மொபைல் எண்ணிற்கும் குறுஞ்செய்தி வாயிலாக மதிப்பெண் விபரங்கள் அனுப்பப்பட உள்ளது.
மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் – புதிய கல்வி கொள்கை இன்று வெளியீடு!!
டெலிகிராம் இல் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்
மேலும் பிளஸ் 2 மறுவாய்ப்பு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட உள்ளது. சில நாட்களுக்கு முன்னர் நடைபெற்ற இத்தேர்வினை தமிழகம் முழுவதும் 519 மாணவ, மாணவிகள் எழுதினர். இதற்கான முடிவுகளும் ஜூலை 31ம் தேதி வெளியிடப்பட உள்ளது.