தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்தில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
மழைக்கு வாய்ப்பு:
வடகிழக்கு பருவமழையால் தமிழகம்,புதுச்சேரி, காரைக்கால் பகுதியில் பெரும்பாலான இடங்களில் மழை விடாமல் பெய்து வருகிறது. மேலும் வங்க கடல் பகுதியில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருக்கிறது. இதன் காரணமாக தமிழகத்தில் 4 நாட்களுக்கு மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதனால் கனமழை காரணமாக, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நேற்று தமிழ்நாட்டில் 28 மாவட்டங்களில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது . இந்த நிலையில் இன்று (12.11.2022) தமிழ்நாட்டில் 26 மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழக பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு – அரசின் உதவித்தொகை திட்டம்! முழு விவரங்கள் உள்ளே!!
அதில் சென்னை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், நீலகிரி, கோவை, சேலம் உள்ளிட்ட 26 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்தில் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. எனவே பொதுமக்கள் வெளியில் செல்லும் போது கவனமாக செல்ல வேண்டும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது.