தமிழகத்தில் பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள், தங்களுக்கான ஆயுள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டிய கடைசி தேதி குறித்த அதிரடி அறிவிப்பை மாநில அரசு வெளியிட்டுள்ளது.
அரசு அறிவிப்பு:
தமிழகத்தில் பென்ஷன் வாங்கும் மூத்த குடிமக்கள், ஒவ்வொரு ஆண்டும் தங்கள் உயிரோடு இருக்கிறோம் என்பதற்கான ஆயுள் சான்றிதழ், அதாவது ஜீவன் பிரமாண பத்திரத்தை சமர்ப்பிக்க வேண்டும். தற்போது, இந்த ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதிக்குள் இந்த சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும் எனவும், அவ்வாறு சமர்ப்பிக்க தவறினால் உங்களுக்கு பென்ஷன் வழங்குவது நிறுத்தப்படும் என அரசு அறிவித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இதற்கான காலக்கெடு ஏற்கனவே நீட்டிக்கப்பட்டு, வரும் நவம்பர் மாதத்துடன் முடிவடைய உள்ளது. பென்ஷன் பெறுபவர்களுக்கான நேர்காணல், கடந்த மே மாதம் தொடங்கி, தற்போது வரை நடைபெற்று வரும் நிலையில் 70% ஓய்வூதியதாரர்களின் நேர்காணல் முடிவடைந்துள்ளதாக அரசு தெரிவித்துள்ளது.
இந்தியாவில் ஒரே நாளில் 4,858 பேருக்கு கொரோனா உறுதி.,,சுகாதாரத்துறை ரிப்போர்ட்!!
இந்த நிலையில், பென்ஷன் பெறும் மூத்த குடிமக்கள் ஓய்வூதியம் வழங்கும் அலுவலகம், இந்திய அஞ்சல் துறை வங்கி, இ சேவை அல்லது பொது சேவை மையம், ஜீவன் பிரமான் முகம் செயலி மற்றும் ஓய்வூதிய சங்கம் நடத்தும் முகாம் ஆகியவற்றின் மூலம் வருகிற 30.09.2022-க்குள் இந்த சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும் என அரசு அறிவித்துள்ளது.