தமிழகத்திற்கு, இன்று கன மழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இது போக நாளை மறுநாள் முதல் மிக கனமழை பெய்யும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
மிக கனமழை:
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வடகிழக்கு பருவமழை தொடங்கி, மிகத் தீவிரமாக பெய்து வருகிறது. இதுவரை, ஒரு சில மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து வருவதால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கியுள்ளது. அந்த வகையில் தென்கிழக்கு வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவானது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இது, மேலும் வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவும், மேலும் வலுவடைந்து புயலாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இந்த புயலால் தமிழகத்தில் நாளை மறுநாள் முதல் மிக கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
இந்த புயல் தமிழ்நாடு-தெற்கு ஆந்திரா இடையே கரையை கடக்க வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயல் காரணமாக தமிழகத்தில் இன்று முதல் கனமழை தொடங்கும் என்பதால், இன்று ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது . இதனால் பொதுமக்கள் பீதி அடைந்துள்ளனர்.