தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா வின் உருமாறிய ஓமைக்ரான் பிஏ 5, என்ற தொற்று வகை அதி தீவிரமாக பரவி வருவதாக சுகாதாரத்துறை அதிர்ச்சித் தகவல் தெரிவித்துள்ளது.
அதிர்ச்சி தகவல் :
தமிழ்நாட்டில் கடந்த 2 ஆண்டுகளாக வைரஸ் பரவல் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. கடந்த சில மாதங்களாக வைரஸ் பரவல் குறைந்திருந்த நிலையில், மீண்டும் தற்போது புது வேகம் எடுக்கத் தொடங்கியுள்ளது. சென்னை ஐஐடி பகுதியில், உள்ள வெளி மாநிலத்தைச் சேர்ந்தவர்களுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, முகக்கவசம் அணிதல் மற்றும் சமூக இடைவெளியை கடைபிடித்தல் போன்றவைகளை பொதுமக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டும் என சுகாதாரத் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கொரோனா வின் உருமாறிய ஓமைக்ரான் வகை பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.
தற்போது, இந்த பாதிப்பு மாநிலம் முழுவதும் 25 % வரை பரவி இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மரபணு பகுப்பாய்வு செய்து நோயாளிகளை கண்டறிய சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது. இதனால், மீண்டும் தமிழகத்தில் முழு ஊரடங்கு கட்டுப்பாடுகள் அமலாகுமா? என பொதுமக்கள் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்