தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்?? வெளியான முக்கிய தகவல்!!

0
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்?? வெளியான முக்கிய தகவல்!!
தமிழகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் அமல்?? வெளியான முக்கிய தகவல்!!

கடந்த 2003 ம் ஆண்டு பழைய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்து, தேசிய அளவிலான புதிய ஓய்வூதியத் திட்டத்தை தமிழக அரசு அமல் படுத்தியது. இந்த புதிய ஓய்வூதியத் திட்டமானது, பழைய ஓய்வூதியத் திட்டத்துடன் ஒப்பிடுகையில் நிலைப்பு தன்மையுடன் பலன் அளிக்கவில்லை என்ற கருத்தும் அரசு ஊழியர்கள் மத்தியில் உள்ளது. இதனால், பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இந்த வகையில், புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்வதற்காகவே மாநிலம் முழுவதும் CPS ஒழிப்பு இயக்கம் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக பல விதமான போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இதற்கு தகுந்த பலன் கிடைக்காத நிலையில், வரும் மே 27ம் தேதி தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்த இந்த இயக்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தது.

500 மதுபானக்கடைகளின் கணக்கெடுக்கும் பணிகள் நிறைவு – கருணாநிதி பிறந்த நாளில் வெளியாகும் அறிவிப்பு!!

இதற்கிடையில், இந்திய தொழிற்சங்க மையம் (CITU) சார்பாக, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல் படுத்துதல், விலைவாசியை கட்டுப்படுத்துதல், அரசு துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புதல் உள்ளிட்ட கோரிக்கைகளை மையமாக வைத்து நடைபயணப் போராட்டத்தை தொடங்கி உள்ளனர். இந்த நடைப்பயணப் போராட்டமானது கடந்த மே 20ம் தேதி முதல் திருவொற்றில் தொடங்கி, காஞ்சிபுரம், விழுப்புரம் வழியை திருச்சியை அடைந்து வரும் 30ம் தேதியுடன் முடிவடைய உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here