தமிழகத்தில் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த கோரி, அரசு ஊழியர்கள் தீவிரமாக போராடி வரும் நிலையில், போராட்டக் குழு தற்போது முக்கிய அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
அறிக்கை வெளியீடு:
தமிழகத்தில் பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்துவிட்டு, பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். சிபிஎஸ் ஒழிப்பு இயக்கம் என்ற மாநில மையத்தின் சார்பாக, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் நேற்று அரசு ஊழியர்கள் உண்ணாவிரத போராட்டத்தை நடத்தினர். இதில் நீலகிரி, ஈரோடு, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் அரசின் தடையையும் மீறி இந்தப் போராட்டம் நடத்தப்பட்டது.
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
தற்போது, இந்தப் போராட்டத்தில் பங்கேற்று, அரசுக்கு தங்கள் உணர்வுகளை ஆணித்தரமாக வெளிப்படுத்திய ஊழியர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றி என சிபிஎஸ் ஒழிப்பு மாநில மையம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அரசுக்கு, பழைய பென்ஷன் திட்டம் குறித்து இதுவரை வலியுறுத்தி வந்த ஊழியர்கள், தற்போது போராட்ட களத்தில் குதித்திருப்பது தமிழகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.