தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை…, மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

0
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!
தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு வெளுத்து வாங்கப்போகும் கனமழை..., மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்த வானிலை மையம்!!

கடந்த ஒரு வார காலமாக தமிழகத்தில் கோடை வெயில் சுட்டெரித்த போதும், ஒரு சில மாவட்டங்களில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்து வந்தது. தற்போது, மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (ஜூன் 5) முதல் அடுத்த 5 நாட்களுக்கான வானிலை அறிக்கை, சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இந்த அறிக்கையின் படி, இன்று (ஜூன் 5) முதல் ஜூன் 9ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் உள்ள ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஆனால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஜூன் 5 மற்றும் ஜூன் 6ல் 40 முதல் 42 டிகிரி செல்சியஸ் அளவில் வெப்பநிலை இருக்க கூடும். சென்னையை பொறுத்த வரையில், வானம் மேகமூட்டத்துடனே இருக்குமே தவிர இன்றும் நாளையும் 29 டிகிரி முதல் 41 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அட., அட., இந்த அழகை வர்ணிக்க வார்த்தை தான் வேணுமா., சினேகாவின் க்யூட் க்ளிக்ஸ் வைரல்!!

மேலும், மேற்கு திசை காற்று மற்றும் வெப்ப சலனம் காரணமாக வங்கக்கடல் மற்றும் அரபிக்கடலின் முக்கியப் பகுதிகளில் அடுத்த 5 நாட்களுக்கு மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். இதனால், மீனவர்களுக்கு எச்சரிக்கை அளிக்கப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here