தமிழகத்தில் புதிதாக பரவும் ஓமைக்ரான் பிஏ 4 வைரஸ் – மீண்டும் அமலாகும் கட்டுப்பாடுகள்? பீதியில் மக்கள்!!

0

தமிழகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன், புதிதாக ஒருவருக்கு ஓமைக்ரான் பிஏ 4 வைரஸ் பாதிப்பு, உறுதி செய்யப்பட்டுள்ளதால் மீண்டும் ஊரடங்கு அமலாகுமோ? என்ற அச்சத்தில் பொதுமக்கள் உள்ளனர்.

மீண்டும் ஊரடங்கு:

தமிழகத்தில் சென்னை ஐஐடியில் உள்ள வடமாநிலத்தை சேர்ந்த பலருக்கு வைரஸ் பாதிப்பு, அண்மையில் உறுதி செய்யப்பட்டது. புதிதாக பரவி வரும் ஓமைக்ரான், மரபணு மாற்றம் அடைந்து  ஏழு வகையாக உருமாறியுள்ளது. இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன், சென்னையை சேர்ந்த ஒரு தாய் மற்றும் மகளுக்கு ஓமைக்ரான் பாதிப்பு உறுதியானது. இதில் தாய்க்கு பிஏ 2 வகை, மகளுக்கு பி ஏ 4 வகை வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர், இந்தியாவில் முதல் முறையாக பிஏ 4 பாதிப்பு என்பது தமிழகத்தில் உறுதியாகி உள்ளது என்றும், இதனால் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். தற்போது வரை நிலைமை கட்டுக்குள் இருப்பதால் முழு ஊரடங்கு குறித்து, எந்த முடிவும் அரசு எடுக்கவில்லை என தெரிவித்துள்ளார். இருந்தாலும் இந்த புது வகை பாதிப்பு பொதுமக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here