தமிழக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் குடிநீர், கழிவுநீர் சுத்திகரிப்பு, பசுமை வழிகள் மற்றும் பாதாள சாக்கடை போன்ற திட்டங்களுக்காக நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.
வெளியான உத்தரவு :
தமிழகத்தில், நடப்பாண்டில் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வளர்ச்சி சார்ந்த பணிகளுக்காக, முதல்வர் ஸ்டாலின் முக்கிய அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளார். நகர்ப்புற உள்ளாட்சிகளில் குடிநீர் திட்டம், கழிவுநீர் சுத்திகரிப்பு மையத்துடன் கூடிய பாதாள சாக்கடை திட்டம், நீர்நிலைகளை மேம்படுத்துதல், பூங்காக்கள் மற்றும் பசுமை சாலைகளை அமைத்தல் போன்ற வளர்ச்சி பணிகளுக்காக ரூபாய் 183.13 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
இதற்காக, மத்திய அரசின் சார்பாக ரூபாய் 361. 68 கோடியும், மாநில அரசின் மானியமாக ரூபாய் 371.68 கோடியும் உள்ளாட்சி அமைப்புகளின் சார்பாக ரூபாய் 426.90 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த மாவட்ட ஆம்புலன்ஸ் டிரைவர், மருத்துவ உதவியாளர் பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு.,விவரம் உள்ளே!!
தமிழகம் முழுவதும் உள்ள 131 பணிகளுக்கு, இந்த நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் இந்த திட்ட பணிகளை முடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனால் நீண்ட காலமாக இழுபறியில் உள்ள அரசின் பல்வேறு திட்டங்கள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு வரவுள்ளது.