தமிழகத்தில், வரும் 16ஆம் தேதி அந்தமான் அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, புயலாக மாறுவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
புதிய புயல்:
தமிழகத்தில், வடகிழக்கு பருவமழை தொடங்கி தீவிரமாக பெய்து வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இன்று ஆரஞ்ச் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், வரும் 16ஆம் தேதி அந்தமான் அருகே ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
இந்த ஆழ்ந்த தாழ்வு பகுதி புயலாக வலுப்பெற்றால், நிச்சயம் தமிழகம் அதிகன மழை பெய்யக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு குட் நியூஸ் – இனி இந்த சேவைக்கும் முன்பணம் கட்டாயம்! அரசு உறுதி!!
இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை தமிழகத்தின் அநேக இடங்களில் மிக கனமழை முதல் அதி கனமழை வரை பெய்யக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த விழிப்புடன் இருக்க வேண்டும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.