தமிழகத்தில், நீட் தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெற்றவர்கள் விகிதம் குறித்த முக்கிய அறிக்கையை தமிழக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.
கல்வித்துறை அறிக்கை:
தமிழகத்தில் 12ம் வகுப்பு முடித்த மாணவர்கள், மருத்துவ படிப்பில் சேர்வதற்கு நீட் நுழைவுத்தேர்வு கட்டாயம் எழுத வேண்டும் என மத்திய அரசு அறிவித்தது. அதன்படி மாணவர்கள், தொடர்ந்து நீட் தேர்வு எழுதி வருகின்றனர். இந்த ஆண்டு தமிழகத்தில் இருந்து 17, 972 மாணவர்கள் நீட் தேர்வு எழுத பதிவு செய்திருந்த நிலையில், 12, 840 பேர் மட்டுமே தேர்வு எழுதினர். இதில், 35% பேர், அதாவது 4,447 பேர் மட்டுமே தேர்ச்சி பெற்றுள்ளனர்.
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
இந்த நீட் தேர்வு எழுதிய நீலகிரி, விழுப்புரம், விருதுநகர், சேலம், பெரம்பலூர், மதுரை ஆகிய அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவர்கள் 100% தேர்ச்சி பெற்றுள்ளனர். குறைந்தபட்சமாக திருப்பத்தூர் மாவட்டத்தில் தேர்வு எழுதி 7% பேர் மட்டுமே தேர்ச்சி அடைந்துள்ளனர். பெரும்பாலான மாவட்டங்களில் 20-25% மாணவர்கள் மட்டுமே இந்த ஆண்டு, நீட் தேர்வில் தேர்ச்சி அடைந்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.