
தமிழ்நாடு மட்டுமல்லாமல் பல்வேறு மாநிலங்களிலும் மருத்துவ படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என நீண்ட காலமாக கோரிக்கை எழுந்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தில் நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அண்மையில் தொடங்கி வைத்தார். இதற்காக பள்ளி மாணவர்களிடமும் கையெழுத்து பெறும் வகையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.
Enewz Tamil WhatsApp Channel
இந்நிலையில் மத்திய அரசு இயற்றிய சட்டத்துக்கு எதிராக மாநில அரசு போராட்டம் நடத்தக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவை பரிசீலித்த நீதிபதிகள், “நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு உரிமை உள்ளது. மாணவர் நலனுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படும் வகையில் அமைந்தால் வழக்கு தொடரலாம்.” எனக் கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
தமிழக ரேஷன் கடை ஊழியர்களே.., இத செஞ்சே ஆகணும்.., அரசு பிறப்பித்த அதிரடி உத்தரவு!!!!